கடலூர் டிச, 25
நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் சிமெண்டு கட்டைகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று சிமெண்டு கட்டைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் சிமெண்டு தடுப்பு கட்டைகள் அகற்றப்படவில்லை என தெரிகிறது.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் சி.என்.பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிமெண்டு கட்டைகளை அகற்றக்கோரியும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் நடுவீரப்பட்டு காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.