Spread the love

கோவை டிச, 24

கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதயநிதி வரும் ஸ்டாலினுக்கு அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு, ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணி, கொடிசியா மைதானம் செல்லும் இடத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய நிகழ்வுகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நகர, பகுதி ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *