கரூர் டிச, 21
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.