Spread the love

திருப்பத்தூர் டிச, 19

திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அஞ்சல் குறைத் தீர்வு முகாம் வருகிற 26 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் பதிவுத்த பால், விரைவுத்தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா அஞ்சலக ஆயுள் காப்பீடு மற் றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாரினை முழு விவரங்களுடன் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளர், திருப்பத் தூர் கோட்டம், திருப்பத்தூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமா கவோ வருகிற 21 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் அஞ்சல் குறை தீர்வு முகாமில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *