தூத்துக்குடி டிச, 17
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா, முருகேஸ்வரி,சொர்ணா, சுப்புலெட்சுமி, தெய்வராணி, அரி கிருஷ்ணன், முத்து கணபதி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சுப்பையா வரவேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.