புதுடெல்லி டிச, 12
ஜி20 நாடுகளின் தலைமை பெயர் பொறுப்பை இந்தியா கடந்த ஒன்றாம் தேதி ஏற்றுக்கொண்டது. ஜி 20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் 200 கூட்டங்கள் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் கூட்டம் நாளை பெங்களூரில் நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதித்துறை சார்ந்த விவாதம் பேசப்படுகிறது.