கோயம்புத்தூர் டிச, 1
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் டி.கோட்டாம்பட்டி வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2,150 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டது அறிந்தும் வினோத் குமார் விற்பனை செய்ததையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.