புதுடெல்லி நவ, 30
தலைநகர் டெல்லியில் மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த மாதத்தில் மட்டுமே இது மூன்றாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.