Spread the love

விழுப்புரம் நவ, 27

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த நாற்று நடும் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் முடிவில் விரைவில் சாலை வசதி, சைடு வாய்க்கால் வசதி, கிராமங்களில் உள்ள சிறு பாலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கை விட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *