Spread the love

நாமக்கல் நவ, 17

அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி வைத்தார். முகாமில் கூட்டுறவுச்சங்கங்களைச் சேர்ந்த 46 பேர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர்.

இதே போல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பொது மருத்துவ முகாம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது. முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர். மேலும் முகாமில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *