Spread the love

பெரம்பலூர் நவ, 12

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6 ம் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர், அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடிவந்தனர். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த 2 பேரை தேடிவந்தனர்.

இந்நிலையில் களரம்பட்டி ரைஸ்மில்லில் பதுங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்கிற பாரதி ஆகிய 2 பேரை நேற்று காவல் துறையினர் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *