ராசிபுரம் நவ, 9
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் தீபிகா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.