Spread the love

திருவண்ணாமலை நவ, 7

கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் இயற்கை வேளாண்மை விவசாய பண்ணையில் காய்கறிகளை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வது சம்பந்தமாக ஆலோசனை பயிற்சி நடைபெற்றது. மருசூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தனி வேன் மூலம் படவேடு வந்து பஞ்ச கவ்யம், ஜீவகாருண்யம், மீன் கரைசல், ஆகியன குறித்து விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆத்மா திட்ட இயக்குனர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் செல்லத்துரை, வேளாண்மை அலுவலர் கீதா, ஆத்மா திட்ட பணியாளர்கள் பாஸ்கரன் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *