Spread the love

நாகப்பட்டினம் அக், 30

நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரை படியும் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் 12 கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *