கள்ளக்குறிச்சி அக், 27
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.