பெரம்பலூர் அக், 14
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த மாதம் 1 ம்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் கடந்த 11 ம்தேதி முதல் இன்று வரை ஓய்வு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.