கள்ளக்குறிச்சி அக், 7
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் நேற்று தொடர்ந்து 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுங்கச்சாவடியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு திமுக., பாமக., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.