Spread the love

பெரம்பலூர் செப், 29

வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ம் தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான நேற்று தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பெரம்பலூர் கால்நடை மருந்தகம் வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், உதவி இயக்குனர் குணசேகர் முன்னிலையில், கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மூலம் பொதுமக்கள் கொண்டு வந்த 100க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *