Spread the love

கீழக்கரை செப், 23

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டிற்கான இலவச மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் தொடங்கி வைத்து அப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *