கீழக்கரை செப், 11
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில்
“நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற திட்டத்தின் கீழ் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் அப்பள்ளியில் தூய்மைக்கான உறுதி மொழிகள் எடுக்கப்பட்டு, பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்
பரக்கத்துல்லா, நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் கலந்து கொண்டனர்.