Spread the love

மதுரை செப், 6

தென்மேற்கு ரயில்வே சார்பில், மைசூருவில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 8 ம்தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் பகல் 11.45 மணிக்கு மைசூரு சென்று சேரும்.

மேலும் இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *