Spread the love

ராமேசுவரம் செப், 4

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனை சேர்ந்த அசிசியான் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றில் கேரள மாநிலம் கொச்சி துறைமுக பகுதியில் இருந்து கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர். அவர்களின் படகு கடந்த 28-ந் தேதி திடீரென பழுதானது. பழுதை சரி செய்ய முடியாமல் படகிலேயே 14 மீனவர்களும் தவித்தனர்.

இதுகுறித்து படகு உரிமையாளர் ராமநாதபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அவர்களை உடனடியாக மீட்க மனு கொடுத்தார்.இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நடுக்கடலில் படகில் தத்தளித்த 14 மீனவர்களும் என்ஜின் பழுதை சரிசெய்து நேற்று காலை படகுடன் பாதுகாப்பாக கொச்சின் துறைமுக கரைக்கு திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *