சென்னை மார்ச், 19
தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதே போல மார்ச் 22 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது