Spread the love

துபாய் நவ, 14

ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரீஜன்சி கலரியா திரையறங்கில் (போஸ்ட்மன் ஃபிலிம்ஸ்) பிபின்ராஜ், சுனில்,பாலு தயாரிப்பில் , இயக்குனர் ஜெகன் சுப்ரமணியம் கதை மற்றும் இயக்கத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த ராஜ் குமார் கதாநாயகனாக நடித்த இராணி என்ற தமிழ் படம் திரையிடப்பட்டது. எதிரிகளின் வஞ்சகத்தால் கைக் குழந்தையையும் மனைவியையும் விட்டுப் பிரிந்து தன் குடும்பத்தைக் மீண்டும் அடைய போராடும் ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதை தான் இந்த “இராணி ” என்ற தமிழ் படம்.

இப்படம் பிரவின் ஜெயரட்ன ஒளிப்பதிவில், அருன் டான் இசையில், ஜயனி வீரசிங்க, அனில் ஜயசிங்க, ரெஜினா கிறிஸ்தொபர், ஹரி மணிகன்டன், சஹான் தேவா, மருதுபாண்டியன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை வெளியீடுவதற்கு , கேப்டன் டிவி, தினகுரல் நாளிதழ், சதர்ன் மெயில் ஆங்கில நாளிதழ், வணக்கம் பாரதம் வாரஇதழ், தமிழக குரல், புதுகை ஸ்டார் டிவி, மீடியா7 உள்ளிட்டோர் ஊடக ஆதரவலர்களாக உறுதுணையாக இருந்தனர்.

இப்படத்தைக்கான டாக்டர் பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், அசுரவதம் குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா பெர்னாண்டஸ், தினகுரல் நாளிதழ் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, மேலும் குடுப்பத்தினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

“இராணி ” படத்தை பார்த்துவிட்டு வந்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக தங்களுடைய நேர்மறையான கருத்துக்களை பதிவுசெய்து படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் சிறப்பாக நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *