குவைத் ஆக, 24
வளைகுடா அரபு நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் இந்திய அரசால் சிறந்த குடிமகன் என்று பெயர் பெற்றவர் பத்மபூஷன் விருது பெற்ற கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை அதன் தொண்டர்கள் “வறுமை ஒழிப்பு தினமாக” உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து வளைகுடா நாடான குவைத்தில் கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமான முறையில் தேமுதிக குவைத் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அமைப்பின் பொருளாளர் A.T.முருகன் தலைமையில் செயலாளர் மாலிக் அன்சாரி, துணைசெயலாளர் ரபீக்ராஜா முன்னிலையில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணைசெயலாளர் S.S.செந்தில், கேப்டன் மன்ற செயலாளர் A.பழனி, S.அன்புராஜா, M.பெரியார், M.யூசுப், R.பிரபாகரன்,P.ஆறுமுகம், T.சிக்கந்தர் மற்றும் மற்றும் குவைத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.