ராமநாதபுரம் மே, 3
தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள் அகற்றிட வேண்டும் என்றும் அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.