Spread the love

துபாய் ஏப், 1

ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் உள்ள ஆம்பூர் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் சனா சாதிக், ஷாஹுல் ஹமீது, அம்ஜத் இப்ராஹிம், முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தங்கதுரை, அதிமுக அமீரக பிரிவு செயலாளர் ரவிசந்திரன், நிர்வாகி டொனால்ட், அதிமுக மகளிர் அணி தலைவி ஷமீம் பானு, தேமுதிக முன்னால் அமீராக செயலாளர் காரல் மார்க்ஸ், தேசிய தமிழ் நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, A2B ராஜு மந்திரி, டிக்டாக் புல்லிங்கோ குழுவின் அயாஸ், நியாஸ் எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, மதுரை பிரியாணி நிறுவனர் பாலா, முத்தமிழ் பாலு, குடவாசல் ஃபஹாத், வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா நிருபர் தஸ்லீம், ஏசியா புக் சாதனை தமிழ் பாடகி மிருதுளா, அன்புக்குடும்பம் மீனு உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

S. தஸ்லீமா B Sc, MCA//முதன்மை நிருபர் – வளைகுடா

வணக்கம் பாரதம் வார இதழ் & 24×7 NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *