ராமநாதபுரம் டிச, 16
ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று முதல் நாட்டு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறுவுறுத்தியுள்ளது