Spread the love

துபாய் ஆக, 16

ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான 77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த வழக்கறிஞர் பதர் அப்துல்லா கமீஸ், முஹம்மது சரபுதீன், அரவிந்த் குழும நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகர், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் வளைகுடா நிருபர் நஜீம் மரிக்கா, TEPA பால் பிரபாகர், சமூக ஆர்வலர் உஸ்மான், A2B ராஜு, கள்ளக்குறிச்சி சின்னா என்ற சின்னசாமி, முத்தமிழ் சங்கம் பாலு, உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *