Spread the love

சென்னை மே, 29

கத்தரி வெயில் எனப்படும் அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த மே 4ம் தேதி அக்னிவெயில் தொடங்கியதை அடுத்து கடந்த மூன்று வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாளையுடன் அக்னி வெயில் முடிவடைவதால் வெயில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று முதல் மே 31 வரை தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *