Spread the love

கள்ளக்குறிச்சி ஜன, 8

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களது ஆதார் விபரத்தை வீடு வீடாக சென்று ஆதார் எண்ணை சேகரிக்கும் பொருட்டு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுவரை இணைக்காதவர்கள் எனவே இந்த முகாமில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இதுவரை இணைக்காத வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் விபரத்தை அளித்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *