Spread the love

திருக்கோவிலூர் ஆகஸ்ட், 11

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர் புவனேஸ்வரி மற்றும் திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதாவிடம் பொதுமக்கள் மனுஅளித்தனர்.

இதையடுத்து நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *