Spread the love

பெரம்பலூர் டிச, 29

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கள்ளம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைசெயலாளர் துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றியசெயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சிவசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *