Spread the love

மதுரை டிச, 11

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *