சவுதி டிச, 10
கத்தாரில் உலகக்கோப்பை ஃபிஃபா கால்பந்து போட்டியின் போது செய்தியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது செய்தி கொடுத்துக் கொண்டிருந்த கிராண்ட் வால் என்ற அமெரிக்க செய்தியாளர் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.