பெரம்பலூர் டிச, 7
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குபேட்டையிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார்.
முன்னதாக வேளாண்மை பொறியியல்துறை சார்பில் தனிநபர் எந்திரம் மானியத்தில் வழங்குதல் திட்டத்தின் கீழ் பயனாளி ரெங்கராஜிக்கு ரூ.3,97,000 அரசு மானியத்துடன்கூடிய ரூ.7,95,000 மதிப்பிலான டிராக்டரை அனில்மேஷ்ராம் வழங்கினார்.