நாகப்பட்டினம் நவ, 21
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.