நாகப்பட்டினம் நவ, 19
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதி குழு மானியத்தில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.