பெரம்பலூர் நவ, 18
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர் ராமு, காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, சிறப்பு துணை ஆய்வாளர் மருதமுத்து, குழந்தைகள் நல அறக்கட்டளையை சேர்ந்த முரளீஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.