திருப்பூர் நவ, 9
திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் வினீத் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.