Spread the love

ராமநாதபுரம் நவ, 6

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சிறுசேமிப்பு துறையின் மூலம் சிறந்த முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல், உலக சிக்கன தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.உலக சிக்கன நாளையொட்டி பள்ளிகள் அளவில் மாணவ-மாணவிகளுக்கு சேமிப்பின் பயன்கள் குறித்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடந்தன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்வில் சிறுசேமிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் முத்துக்குமார், கண்காணிப்பு அலுவலர் திலீப்குமார், ராமநாதபுரம் மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *