சென்னை நவ, 5
தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும் ஸ்க்ரப் டைபர்ஸ் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதே போல் டெங்குவால் 4,806 சிக்கன்குனியாவால் 140, மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொற்றுகளை தடக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.