Spread the love

புதுச்சேரி அக், 26

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் நகர வீதிகளில் குவிந்த 450 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. பட்டாசு வெடிப்பு புதுவையில் நாள்தோறும் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் இரவு, பகலாக நகர வீதிகளிலும், பொது இடங்களிலும் பட்டாசு வெடித்தனர். இதனால் உருவாகும் பட்டாசு குப்பைகள், பலகாரங்களின் கழிவுகள், அமாவாசை படையல் கழிவுகள் என இன்று அதிக அளவில் கழிவுகள் உருவாகின. இரவு வரை பட்டாசு வெடித்துவிட்டு அந்த குப்பையை பொதுமக்கள் ரோட்டிலேயே வீசியிருந்தனர்.

மேலும் நகரில் எந்த வீதியை பார்த்தாலும் பட்டாசு வெடித்த காகிதன் குவியல்கள் குப்பையாக கிடந்தன. வழக்கமாக நகரப்பகுதியில் குப்பை வாரும் பணியானது பகல் மற்றும் இரவு என 2 வேளைகளில் மட்டும் நடைபெறும். நேற்று தீபாவளியையொட்டி அதிக குப்பைகள் சேர்ந்ததால் பகல், மதியம், இரவு என 3 ஷிப்டுகளாக குப்பை சேகரிக்கும் பணி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *