முக்கோனோ அக், 26
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.
தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.