பெரம்பலூர் அக், 18
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் 5 ம்தேதி வருகை தரவுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.