நாமக்கல் அக், 7
பரமத்திவேலூரில் நடந்த ஏலத்தில் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பு ஏலம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து 223 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.78.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.69-க்கும், சராசரியாக ரூ.75க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்து 534க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 702 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.74-க்கும், குறைந்தபட்சமாக ரூ.54.39-க்கும், சராசரியாக ரூ.74-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 368-க்கு வர்த்தகம் நடைபெற்றது.