சென்னை அக், 5
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 20 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது.
மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை வந்த காரணத்தால் விண்ணப்பிக்க அவகாசம் 6 ம்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 125 இடங்கள் கிடைக்கின்றன. மேலும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3050 பெறப்படுகிறது. மொத்தம் 8225 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் 848 போக மீதமுள்ள 7,377 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 1,290 எம்.பி.பி.எஸ். இடங்கள் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும்.