Spread the love

தூத்துக்குடி அக், 5

நபிகள் நாயம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை வருகிற 9 ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தமிழக அரசால் மதுவிற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து உரிம தலங்களில் அமைந்து உள்ள மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *