Spread the love

கடலூர் செப், 29

சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் அந்தோணிசாமி வரவேற்றார்.

மேலும் விருத்தாசலம் துணை ஆட்சியர் பழனி கலந்து கொண்டு 256 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *