Spread the love

தூத்துக்குடி செப், 27

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக. சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் மவுலானா முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

மேலும் அதிமுக அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர்கள் தாஜ்குமாரி, நாஞ்சில் மாதேவன் ஆகியோர் பேசினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், காயல்பட்டினம் பனை வெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய எம்ஜிஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *